மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் கைது

ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவால் இன்று கைதுசெய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களை இந்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க, திணைக்களத்தின் ஓய்வுபெற்ற தகவல் தொழில்நுட்ப உதவி இயக்குநர் பிரியந்த பண்டார எரியகம மற்றும் அத்தரகமத்தைச் சேர்ந்த எழுத்தர் தம்மிக நிரோஷன் ஆகியோர் இன்று (01) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன் விசாரணைக்கு வந்தது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top