ஹிமாச்சல் பிரதேசத்தில் கனமழையால், 23 பேர் உயிரிழந்துள்ளனர்

ஹிமாச்சல் பிரதேசத்தில் கனமழையால், 23 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கனமழையினால் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு (30) பெய்த கனமழையால், பியாஸ் நதி நிரம்பி வழிவதன் காரணமாக, கர்சோக் , பண்டோஹ் , துனாக் மற்றும் தரம்பூர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பல பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top